
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் நிதியுதவியுடன் மூதூர் – சேனையூர் புவனேஸ்வரி வித்தியாலத்தில் கொவிட் தடுப்பு மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஹொலி மற்றும் அவரது துணைவி டேவிட் ஹொலி உள்ளிட்டோர் இன்று புதன்கிழமை குறித்த பாடசாலைக்கு வருகை தந்தார்.
இதன்போது பாடசாலை மாணவர்கள், நிருவாகத்தினரால் தூதுவருக்கு உட்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அத்தோடு பாடசாலை நிருவாகத்தினால் தூதுவரிற்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் அவுஸ்திரேலிய தூதுவராலயத்தினால் குறித்த பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பார்வையிட்டனர்.