
வைத்தியர்களிற்கு வழங்கப்படும் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, வரப்பிரசாதம் ஆகியவற்றில் அரச தலையீடுகள் காணப்படுவதாக வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார் .
அரச மருத்துவ சேவைகள் என்ற அடிப்படையில் விசேட வைத்திய நிபுணர்கள், தர வைத்தியர்கள், மருத்துவ நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் ஆகிய மூன்று பிரிவினராக காணப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மருத்துவ நிர்வாக சேவை பிரிவிலே இரு பிரிவுகள் காணப்படுகின்றன. விசேட வைத்திய நிபுணர்கள், தர வைத்தியர்கள் பிரிவுகளில் ஒரு பிரிவே காணப்படுகிறது.
இவ் மருத்துவ நிர்வாக சேவை பிரிவிலே பிரதி நிர்வாக பிரிவு, சிரேஷ்ட நிர்வாக பிரிவுகள் காணப்படுகின்றன.
இவ் மருத்துவ நிர்வாக சேவையில் பணிபுரியும் ஊழியர்கள் பிரதி நிர்வாக பிரிவு இணைக்கப்பட்டு 3வருட காலத்தின் பின்னர் விசேட வைத்திய நிபுணர்கள் பிரிவிற்கு மாற்றப்பட்டுகின்றனர்.
இம் முறை காரணமாக பிரதி நிர்வாக பிரிவினர், சிரேஷ்ட நிர்வாக பிரிவிற்கு உள்வாங்கப்படாமல் அதிக காலம் பிரதி நிர்வாக பிரிவில் உள்ளனர்.
இதனால் சிரேஷ்ட நிர்வாக பிரிவுனர்களுக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வெற்றிடமாகவே காணப்படுகிறது.
இவ் விடயம் சம்பந்தமாக கடந்த 3ம் திகதி அரச வைத்திய சங்கத்தின் மத்திய குழு கலந்துரையாடியது.
சிரேஷ்ட நிர்வாக பிரிவில் ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக ஒருவர் இரண்டு பதவிகளை ஏற்கும் நிலை உருவாகி உள்ளதாக கலந்தாலோசிக்கப்பட்டது.
ஆகவே நாம் எடுத்த முடிவானது, இரு பிரிவுகளாக உள்ள பிரிவுகளை ஒரு பிரிவாக மாற்றவும், இவ் சிரேஷ்ட நிர்வாக பிரிவிற்கு பல வரப்பிரசாதங்கள் காணப்படுகின்றன அவற்றை ஏனைய பிரிவுகளிற்கும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ் நிர்வாக சேவையில் தர வைத்தியர்கள் தற்போது சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், கடந்த காலங்களில் நிர்வாக சேவை பிரிவினர் அரசியல் பழி வாங்கல் நிலைக்கு உட்பட்டுள்ளனர். அவர்கள் அரச வைத்திய சங்கத்திற்கு குற்றச்சாட்டை பதவும் செய்துள்ளனர்.
இவற்றிற்கான தீர்வு வழங்கப்படுவதோடு, அரச மருத்துவ நிர்வாக சேவையை சிறப்பாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- என்றார்.