நாட்டின் தலையெழுத்தை மாற்ற ரணிலால் மட்டுமே முடியும் – ஐ.தே.க.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

வறுமையில் வாடும் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பதால் எதிர்காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னைய ஆட்சிக்காலத்தில் நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றிருந்தது என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது இந்தியா மற்றும் பல நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயம், எலுமிச்சை, தக்காளி, குடை மிளகாய், கரட், போஞ்சி, கத்தரிக்காய், பூசணிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் மற்றும் கீரைகள் போன்றவற்றின் விலைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு ஆரோக்கியமான உணவை கொள்வனவு செய்ய முடியாது எனவும் தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் மக்களை நாட்டை விட்டு விரட்டியடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த வேளை தோல்வியடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதாகவும் குறிப்பிட்ட அவர், நாடு அனைத்துத் துறைகளிலும் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் எனவே உண்மையில் நாட்டை வழிநடத்தி இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்ற யாரால் முடியும் என்பதை பொதுமக்கள் அடையாளம் காண வேண்டும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *