
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில், முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் முத்தமிழ் விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது.
விழா நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் விருந்தினர்கள் வரவேற்புடன் ஆரம்பமாகியுள்ளது.
முழுநாள் நிகழ்வாக இது நடைபெறவுள்ள நிலையில்,காலை 9.30 மணி முதல் ,இரவு 10 மணி வரை இயல், இசை, நாடகம் ஆகிய அரங்க நிகழ்ச்சிகள் 3 பிரிவாக இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் இ. இளங்கோவன் கலந்து சிறப்பிக்கின்றார்.



