
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான அளவை, நிறுவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை திருகோணமலை மாவட்ட அளவிட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி பி. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இம்மாதம் 18,19, 20 மட்டும் 21 ஆகிய திகதிகளில் கிண்ணியா பிரதேச பிரதேச செயலக கட்டடத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையும் அளவை , நிறுவை உபகரணங்களுக்கு முத்திரை இடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த பிரதேசங்களிலுள்ள கடைகள், கூட்டுறவுச் சங்கங்கள், கமநல சேவைத் திணைக்களங்கள் மற்றும் வங்கிகளில் உபயோகிக்கும் சகல அளவை, நிறுவை உபகரணங்களையும் சரிபார்த்து முத்திரையிட்டு, வியாபாரிகள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை சட்ட ரீதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
முத்திரை இடப்படாது, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது,1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.