வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தினை நவகமுவ பகுதியில் இராணுவ புலனாய்வாளர்களினால் சோதனையிடப்பட்டது.

இதன்போது, 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளினை உடமையில் வைத்திருந்த 39 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு ஈரட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஈரட்டை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கட்டுநாயக்கவில் நடக்கும் மோசடி வர்த்தகம் – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *