ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட வடிவம் பெற்ற பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது பொலிஸார் சோதனை செய்வார்கள்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும்.

அதன்பிறகும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அதையும் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் உத்தேச திட்டத்தை அறிவித்த அரசாங்கம், 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என அறிவித்திருந்தது. ஆனால், தற்போது திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *