இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு: ஒருவர் சுட்டுக் கொலை!

பொல்பிதிகம – மதஹபொலயாய – பொத்துவில பிரதேசத்திலுள்ள வாயு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொல்பிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் கொலையின் பின்னர் சந்தேக நபர் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இக் கொலை சம்பவம் தொடர்பில் பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் ஆணின் சடலம் மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *