அக்கிராசன உரையில் – ரணில் அரசியல் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தினார்- திஸ்ஸ!

அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரை நிகழ்த்தியிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 75 ஆவது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களிடம் குறிப்பிட்ட விடயத்தையே அவர் அரசாங்க கொள்கை உரையிலும் குறிப்பிட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற குழுக்கள் வலுவிழந்துள்ளன.

மீண்டும் குழுக்களை நியமிக்க பல மாதங்கள் செல்லும். ஜனாதிபதியின் செயற்பாடு பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஆகவே பயனற்ற கொள்கை உரை நிகழ்வில் கலந்துக் கொள்வது அர்த்தமற்றது என்பதால் ஐக்கிய மக்கள் சக்தியினர் முழுமையாக கூட்டத்தொடரை புறக்கணித்திருந்ததாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *