புலிகளுக்கு எதிரான யுத்தத்தால் மகிந்த பிரபல்யம் அடையவில்லை – நாட்டில் ஏற்பட்ட அமைதியே அவரை பிரபல்யமாக்கியது – எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்ததை மேற்கொள்வதற்கு எடுத்த தீர்மானம் அப்போது பிரபல்யமாக இருந்ததில்லை எனவும் ஆனால் 

அந்த தீர்மானத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைதியே மகிந்தவை பிரபல்யமாகயிருந்ததாக பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை 

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்தபோது இந்த இலங்கை தாய் காப்பாற்றுவதற்கு எவரும் முன்வராத நிலையில் முதுகொலும்புள்ள ஒருவராக ரணில் விக்கிரமசிங்கவே 

முன்வந்திருந்ததாக பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன பாராட்டு தெரிவித்துள்ளார்.

9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் ஆரம்பமானியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை 

தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக நடைபெற்று வருகின்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் விரும்பாத முடிவுகளை துணிந்து எடுக்கப்போவதாக ஜனாதிபதி உரையில் குறிப்பிட்டிருந்ததாகவும் ஆனால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்ட சஞ்ஜீவ எதிரிமான்ன இன்றும் 

இரண்டு மூன்று ஆண்டுகளில் ஜனாதிபதி தெரிவித்த விடயம் எவ்வளவு பெறுமதி வாய்ந்தது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *