பதவிக்கு அச்சுறுத்தல், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் ஜோன்சன் திட்டம்

பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அறிவிப்பை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு முடக்க கட்டுப்பாடுகளின்போது அவரது இல்லத்தில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வு குறித்து தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக 20 கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மாதம் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அதிகரிப்பு காரணமாக விதிக்கப்பட்ட தற்போதைய கட்டுப்பாடுகளை அமைச்சரவை மீளாய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *