
எதிர்வரும் 8 தினங்களுக்கு மின் உற்பத்திக்கு தேவையான 10 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்றைய தினம் மின்சார சபைக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அமெரிக்க டொலர் மூலம் இரண்டு கப்பல்களில் 35 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாளாந்த மின் உற்பத்திக்கு 1500 மெற்றிக் தொன் தேவைப்படுகின்றது.
இதன் காரணமாக நேற்று கொண்டுவரப்பட்ட ஒரு தொகை டீசலில் 10 ஆயிரம் மெற்றிக் தொன்னை மின்சார சபைக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.