பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் ரயில் சாரதிகள்! வெளியானது அறிவிப்பு

லொகோமோடிவ் ரயில் சாரதிகள் இன்று(09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ரயில்வே பொது முகாமையாளரிடம் முன்வைக்கப்பட்ட பல விடயங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறாமை மற்றும் நியாயமற்ற வரி அறவீடு தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று மாலை நடைபெறவுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *