தனுஷ் விவாகரத்து விவகாரம்; வைரலாகும் செல்வராகவன் பதிவு!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு திரயுலகை அதிரவைத்துள்ளது. அவர்களின் பிரிவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ஆகிய இருவரும் பிரிந்துள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அந்த பதிவில், 18 வருட காலமாக நண்பர்களாக, இணையராக, பெற்றோராக, நலம் விரும்பிகளாக இருந்ததாகவும், இந்த பயணம் புரிதலுடனும், அனுசரிப்புடனும், வளர்ச்சியுடனும் இருந்ததாகவும் தனுக்ஷ் குறிப்பிட்டுள்ளார்.அதோடு தங்கள் முடிவுக்கு மதிப்பளித்து, தனியுரிமையுடன் தாங்கள் இதனை கையாள ஒத்துழைப்பு அளிக்கும்படி அனைவரையும் தனுஷ் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் சின தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.

அதில், தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள்.

இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *