
இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஆற்றுப்படுகையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையால் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த விஜயம் அமைந்துள்ளது.
அதன்படி, அரச அதிபரின் பணிப்பின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மேலதிக அரச அதிபர், மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் இன்று (19) இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடத்துக்கு களவியமொன்றை மேற் கொண்டிருந்தார்கள்.
இதன்போது சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு மேலதிகமாக இராணுவ காவலரண் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

