தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எழு பேர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட எழு பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் இன்று நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நேற்று தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *