எதிர்க்கட்சியை வம்புக்கு இழுத்த எரிசக்தி அமைச்சர்!

நாங்கள் திருட்டு தனமாக எந்த நாட்டுடனும் ஒப்பந்தம் செய்யவில்லை என எரிசக்தி அமைச்சர் உதயன் கம்பன்பில சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

இப்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாங்கள் உருவாக்கியது இல்லை.

1955 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் வாங்கிய கடன்கள் நெருக்கடி தான் இவை. இதற்கு கொரோனா காரணம் என்று நாம் கூறவில்லை.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கடன் பெரும் அழுத்தமாக காணப்படும். நாம் எந்த நாட்டுடனும் திருட்டு தனமாக ஒப்பந்தம் செய்யவில்லை.

முதலில் இது தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்பிக்கப்பட்டு, பின்னர் ஊடக சந்திப்பிலும் நாம் இது பற்றி தெரியப்படுத்தியுள்ளோம்.

உங்கள் யாருக்கும் இது பற்றி சந்தேகம் இருந்தால் வாருங்கள் விவாதத்துக்கு நாங்கள் தயார். சவாலுக்கும் தயார்.

மின்சாரத்தை துண்டித்து மக்களை இருட்டில் வைப்பதற்கு எமக்கு விருப்பம் இல்லை. ஆனால் இந்த பிரச்சினை நீண்ட நாட்கள் நீடிக்காது என்றார்.

முதலில் ஒப்பந்த விபரங்களை மன்றில் சமர்ப்பியுங்கள், அதன் பின்னர் சாவல் விடுங்கள் என நாடளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பதிலடி கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *