சங்கானையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் முக்கிய நிகழ்வு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்றையதினம் சங்கானை நிகர வைரவர் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வலி. மேற்கு பிரதேச சபையின் 15 வட்டாரங்களுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், வலி. மேற்கு, வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வலி. மேற்கு பிரதேச சபையின் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *