இலங்கையில் நிலநடுக்கம் குறித்து ஆராய விசேட குழுக்கள்!

மொனராகலை மற்றும் புத்தல அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களை ஆய்வு செய்வதற்காக இரண்டு புவியியலாளர் குழுக்கள் குறித்த பகுதிகளுக்கு சென்றதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன, ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

வெல்லவாய நகருக்கு அருகில் இன்று (11) காலை 2.3 ரிச்டர் அளவில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *