இலங்கையின் கல்வித் துறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் தரம் 6 முதல் தரம் 13 வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், “செயற்கை நுண்ணறிவை” தரம் 08 இல் பாடமாக கற்பிப்பதற்கு தேவையான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *