
அனைத்து பிரஜைகளுக்கும் 30 மாதங்களுக்குள் டிஜிட்டல் பை அறிமுகப்படுத்தப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திறன்பேசி மூலம் பணம் செலுத்துவதற்காக மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட லங்கா கியூஆர் குறியீட்டை, கம்பஹாவில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டதன் பின்னர் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் பரீட்சைச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தங்கள் திறன்பேசியிலுள்ள டிஜிட்டல் பையில் வைத்து எந்த நேரத்திலும் சமர்ப்பிக்க அனைத்து குடிமக்களுக்கும் அனுமதியளிக்கப்படும்.
தற்போது, லங்கா கியூஆர் குறியீடு செலுத்தும் திட்டம் நாட்டின் 13 முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.- என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிகழ்வில் உரையாற்றிபோது, சுற்றுலாத்துறைக்கும் லங்கா கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
13ஐ இனப்படுகொலை நடந்த பின்னர் கோருவது எந்த வகையில் நியாயம்? – கஜேந்திரகுமார் கேள்வி