
தமிழகம் – வேதாரண்யம் அருகே கோடிக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படுவோரால், தாக்குதல் நடாத்தி கொள்ளையிடப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீனவர்களை தாக்கி 200 கிலோ வலை, ஒரு ஜி.பி.எஸ்.கருவி உள்ளிட்ட பொருட்களும், இந்திய நாணயத்தில் ஒரு லட்சம் ரூபா மதிப்பிலான பொருட்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மீனவர்கள், இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் பொலிசாரிடமும் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
புதையல் தோண்டுவதற்கு தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் சிக்கினர்!