கொழும்பில் எழுச்சி பெறும் பாட்டாளி!

‘நம்பிக்கையோடு காத்திருப்போம்’ என்னும் தொனிப்பொருளிலான தேசிய மாநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்கரணவக்க தலைமையில் கொழும்பில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் ‘உயர்வோம், உயர்த்துவோம்’ என்ற கருப்பொருளுக்கு அமைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்பான பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடன்பொறி, புதிய அரசாங்கத்தின் வருகை, படுபாதாளத்திலிருந்து மேலெழுவோம், 73 வருட இருப்பு நிலை உள்ளிட்ட விடயப்பரப்புகள் ஆராயப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாட்டாளியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *