காரைதீவைச்சேர்ந்த பெண் தொழில் முயற்சியாளருக்கு தேசிய விருது!

அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட வளர்ந்து வரும் பெண் தொழில் அதிபர்களை பாராட்டும் விதமாக 18/01/2022 அன்று கொழும்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் காரைதீவு லக்ஸ்மி புரோடக்ஸ் உரிமையாளரான கோ. சிவஜோதிக்கு Women Top50 2021 இற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

விருது பெற்ற பெண் வளர்துவரும் பெண் தொழிலதிபர் கல்முனை நெருக்கு கருத்து தெரிவிக்கையில்,எனது தொழில் முயற்சிக்கு இவ்வாறு விருது கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியளிப்பதுடன் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் அத்துடம் என்னைபோன்ற தொழில் முயற்சியாளர்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜெகதீசன்,காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சுரேக்கா எதிரிசிங்க மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஜெனிதா மோகன், காரைதீவு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோருக்கும் நன்றியைத்தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *