நாட்டில் இன்று மின்வெட்டு? தற்போது வெளியான தகவல்

man holding the vintage lamp with a candle outside. Copy space for your text

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளின் காரணமாக இன்று இரவு மற்றும் நாளை இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரமும், நாளை பிற்பகல் 01.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் எரங்க குடஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டினால் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. மேலும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்னும் 7 மணித்தியாலங்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மூன்று நாட்களில் டீசல் கிடைக்கவில்லை என்றால், மின்வெட்டு மூன்று மணிநேரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *