அரிசியை வழங்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை நிராகரித்த சீனா!

சீனா இலங்கைக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கவுள்ளது எனும் இலங்கை அரசாங்கத்தின் கூற்றை சீனா மறுத்துள்ளது.

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த சீன இராஜ தந்திரி ஒருவர்,

இலங்கையால் இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சீனா அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசிக் கையிருப்பு பெறப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நன்கொடை விரைவில் வழங்கப்படும் என்றும், சீன அரசு ஒப்புக்கொண்டதாகவும், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உரிய அரிசிக் கையிருப்பு கிடைத்தால், நாட்டின் ஐந்து மாத அரிசி தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *