
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு எண்ணெய்த் தாங்கிகளுக்கு அமெரிக்க டொலரில் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனவே மின்வெட்டு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய்த் தாங்கிகளில் ஒன்றுக்கு பணம் செலுத்தினால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது பர்னஸ் ஒயிலுக்குப் பதிலாக வெஸ்ட்கோஸ்ட் அனல் மின் நிலையத்துக்கு டீசலை விநியோகிக்கவும் சப்புகஸ்கந்தைக்கு பர்னஸ் ஒயிலை வழங்கவும் அந்தந்தப் பங்குதாரர்களுடனான சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, மின்சார உற்பத்திக்கான டீசல் மற்றும் உலை எண்ணெயை வழங்க முடியும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டிய 93 பில்லியன் ரூபா கடனை செலுத்துவதற்கான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனவரி 30 ஆம் திகதிக்குள் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிகளைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.