
நீர் மின் உற்பத்தித் திட்டத்திற்கு நீரை பயன்படுத்துவதால் விவசாய நிலங்களுக்கு நீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கூற்றை இராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகம மறுத்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நீர்த்தேக்கங்கள் நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அதேவேளை குறிப்பிட்ட சில ஏரிகள் மற்றும் ஆறுகள் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாகனங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் மற்றும் மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும்.
ஆதாரமற்ற கூற்றுக்கள் முன்வைக்கப்படுவதாகவும், தனிப்பட்ட கட்சிகளால் அன்றாடம் பிரச்சினைகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியிலுள்ள சில தரப்பினர் தங்களது அரசியல் பிழைப்புக்காக ஒவ்வொரு முனையிலும் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர்.
பொது மக்களிடம் இருந்து ஆணையைப் பெற்றதாகவும், எனவே எதிர்க்கட்சிகள் தங்கள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து மக்களுக்குச் சேவை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.