
நாட்டின் ஜனாதிபதி சிறப்பாகவே செயற்படுகின்றார்,ஆனால் அமைச்சர்கள் சிலர் குழம்பி போயுள்ளனர் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்று நம் நாட்டில் மட்டும் அல்ல உலக நாடுகளில் கொவிட் தொற்று காரணமாக மக்கள் அனைத்து அன்றாட தேவைகளிலும் சிக்கலாவே இருக்கிறது.
நம் ஜனாதிபதி நாட்டின் பிரச்சனை தீர்த்து வைப்பதற்காக, தடுப்பூசி வழங்குவதில் பெரும் பங்களிப்பை வழங்குகிறார் .
உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் காணப்படுகிறது.
நம்மில் பல பிழைகள் காணப்படுகின்றன. அவற்றை திருத்தி கொள்ள வேண்டும்.
ஆனால் இங்கு ஒரு அமைச்சர் இன்னுமொரு அமைச்சரை குறை சொல்ல மட்டுமே உள்ளனர்.
இந்த அரசாங்கம் சிறப்பாக செயற்படுகிறது . இவற்றை கட்டி எழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாட்டை கட்டி எழுப்ப சிறந்த வழி முறை ஒன்றை ஜனாதிபதி வழிநடத்த உள்ளார் அதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது- என்றார்.