
சமுர்த்தி பயனாளிகளின், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் , செயலமர்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின், தம்பலகாமம் பிரதேச சமுர்த்தி கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் கால் நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் தொடர்பாக விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சுயதொழில் உற்பத்தி, வாழ்வாதார திட்டத்தை மேம்படுத்தல், வியாபார கைத்தொழில் ஆகிய துறைகளை முன்னேற்றுவது தொடர்பான பயிற்சியினை வளவாளராக கலந்து கொண்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐங்கரன் வழங்கியுள்ளார்.
இதே வேளை 35 பயனாளிகளுக்கு 64 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
