திருமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16 ஆவது ஆண்டு நிகழ்வு இன்று திருமலையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டளவில் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16 ஆவது நிகழ்வு திருகோணமலை ஊடக இல்லத்தில் இன்று (24) திங்கட்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எஸ்.சுகிர்தராஜனின் புகைப்படத்திற்கு, மலர் தூவி மெழுகுவரத்தி ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது, திருமலை ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சாவகச்சேரியில் புகையிரதம் மோதி உயர்தர மாணவன் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *