மானிப்பாய் வீடொன்றில் மீட்கப்பட்ட கூரிய ஆயுதங்கள்! நபரொருவர் கைது

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பகுதியில் கூரிய ஆயுதங்களை கையிருப்பில் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வீடொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வாறான கூரிய ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து குறித்த ஆயுதங்களை கையிருப்பில் வைத்திருந்த குற்றாச்சாட்டில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *