14 தொடக்கம் 16 வயதுடையவர்களிற்கு பைசர் இரண்டாவது தடுப்பூசி

இலங்கையில் 14 தொடக்கம் 16 வயதுடையவர்களிற்கு பைசர் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் முதல் தடுப்பூசி வழங்கி மூன்று மாதம் கழித்து இரண்டாவது தடுப்பூசி வழங்கபடும்.

அதே போல் 20 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு இரண்டாவது எந்த தடுப்பூசி பெற்று கொண்டாலும் 3வது தடுப்பூசி booster பெற்று கொள்வது அவசியம்.

அதன்படி மூன்றாவது தடுப்பூசியை கால தாமதம் இன்றி பெற்று கொள்வது நல்லது.

ஏனென்றால் உலகில் ஒமிக்ரான் பரவல் அதிகமாக காணப்படுகிறது இலங்கையிலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி வழங்கி 6மாத காலம் என்பதால் தடுப்பூசியின் வீரியம் குறைந்து இருக்கும்,

எனவே மூன்றாவது தடுப்பூசியை பெற்று கொள்வது மிகவும் அவசியம்.

கடந்த 10 நாட்களிற்கு மேலாக நோயாளிகளின் வீதம் அதிகரித்துள்ளது

எனவே மக்களின் ஒத்துழைப்பு அவசியம். டெங்கு, கொவிட் போன்றவை அதிக தலைவலி, காய்ச்சல் போன்றே காணப்படுகிறது எனவே இது குறித்து கருத்திற் கொள்ளவது அவசியம்.

பாட்டாலி சம்பிக பிழையான தகவல்களை வழங்கியுள்ளனர் எல்லா விதத்திலும் சரியாக இருக்கும் அவர் இவ் விடயத்தில் பிழையான கருத்தை முன்வைத்தார்.

அதாவது அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி உலகிலே முதலில் வழங்க ஆரம்பித்தது 2021 மார்ச் மாதம் 4ம் திகதி 2020 நவம்பர் இந்தோனிஷியாவில் வழங்கியது என்று அவர் கூறினார். அது தவறான கருத்து.

இந்தோனிஷியாவில் தடுப்பூசி பற்றி ஆராய்ந்து பார்ப்பது இலங்கையர் ஒருவரிடம் நான் தொலைபேசியினுடாக பேசிய போது, அது ஒரு பிழையான தகவல் என்று கூறினார்

எனவே நாங்கள் 16 டொலர்களிற்கு அஸ்ட்ரா செனிகா பெற்றமை என்ற தகவல் பிழையானது. ஆனால் டொலர் 5.25 அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி பெற்று கொண்டோம்.

இனி தகவல் வழங்கும் போது சரியான தகவலை வழங்குங்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *