அபிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும்: வலி தெற்கு பிரதேச சபையில் தீர்மானம்

அபிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும்: வலி தெற்கு பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம், ஜனவரி 25: பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்போது வட்டாரங்களின் முக்கியத்துவம், தேவைப்பாடுகளின் அவசியம் ஆகியன கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தர்சன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதன்போது கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளில் பல தாமதங்கள், குழப்பங்கள் காணப்பட்டதாகவும் இவற்றை நிகழாண்டிலும் தொடர அனுமதிக்க கூடாது என்று சபையின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்போது வட்டாரங்களின் முக்கியத்துவம், தேவைப்பாடுகளின் அவசியம் ஆகியன கருத்தில் கொள்ளப்படும் என்று தவிசாளர் அறிவித்தார்.

இத் தொடர்பாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் அரிகரன் கூறியது: மக்கள் அனைவரும் இந்த பிரதேசத்திற்குரியவர்கள் என்ற அடிப்படையில் அவர்களது தேவைகள் அனைத்தும் தீர்வுகாணப்பட வேண்டும். இதன்போது வேறுபாடுகள், பாரபட்சங்கள் காட்டப்படக்கூடாது. எமது பிரதேச அபிவிருத்தியை மக்கள் சேவையாக புதிய ஆண்டில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

யாழ் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அதிகூடிய வருமானத்தை ஈட்டும் சபைகளில் ஒன்றாக வலி தெற்கு பிரதேச சபை உள்ளது. வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவது எவ்வளவு அவசியமோ, அதே போன்று அபிவிருத்தி பணிகளை அந்த வருமானத்தினூடாக மேற்கொள்வதும் அவசியமாகும்.
தெருவோர கடைகள் புதிது புதிதாக முளைப்பதில் அதிகாரிகளின் தவறான அனுமதி இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். பொதுப் பிரச்சினைகளில் தெளிவான கொள்கை அவசியம். தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் அதை அறிக்கையிடுவதும் முக்கியமல்ல. அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவதே முக்கியமானது.

பிரதேச சபைக்குள்பட்ட பகுதிகளில் தெருவோர மின்விளக்குகளைப் பொருத்துதலில் எமது சபை தோல்லி கண்டுள்ளது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை. தெருவோர மின் விளக்கு ஒன்று பழுதடைந்தால் அதைத் திருத்த சுமார் ஆறு மாதங்கள் வரை இழுத்தடிக்கிறார்கள். இதற்கு பொறுப்பு கூறவேண்டியது தவிசாளர் தான். இந்த ஆண்டில் அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து சிறப்பான சேவையை செய்ய நாம் ஒன்றுபட வேண்டும் என்றுமம் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே, அகில இலங்கை ரீதியில் சுன்னாகம் நூலகம் முதலிடம் பெற்றுள்ளதாகவும் தற்கான விருதும் கௌரவமும் அண்மையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தவிசாளர் அந்த நிலையை தமது நூலகம் பெற உழைத்து ஊழியர்களை கௌரவிப்பதற்கும் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை தமது ஆளுகைக்கள் இருக்கும் ஏனைய நூலகங்களின் மேம்பாட்டுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வடக்கில் 2 நூலகங்களுக்கு மட்டுமே டிஜிற்றல் மேம்பாட்டை மேற்கொள்ள அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் சுன்னாகம் நூலகமும் ஒன்றாகும் என்று குறிப்பிட்ட அவர் இதற்கு வாசகர்களே காரணம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதேசத்தின் சுகாதார ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும் அவற்றை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் அருணாசலம் சந்திரன் – வலன்ரயன் அதற்கான சிறந்த பொறிமுறையை இவ்வாண்டிலாவது உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் மகளிர் தின ஏற்பாடுகள் தொடர்பில் ஈ.பி. டி.பியின் உறுப்பினர் தனுஜாவினால் சபையின் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சபை அனுமதி கொடுத்திருந்ததுடன் சுன்னாகம் பிரதேசத்தில் அம்மாச்சி உணவகம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஈ.பி. டி.பியின் மற்றொரு உறுப்பினர் கஜேந்தினி வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *