பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிப்பு!

பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களை இந்திய இராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு எல்லைத்தாண்டி சென்ற குற்றச்சாட்டில் பாகிஸ்தான் கடற்படையால் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கராச்சியில் உள்ள லந்தி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *