மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (செவ்வாய்க்கிழமை) மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், டெல்லி, லடாக் உத்தரப்பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *