
கொழும்பு, ஜனவரி 25: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சுமார் 250,000 சுதேச மருந்துப் பெட்டிகள் இதுவரை நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் கூறியது: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆயுர்வேத மருந்துகள் அடங்கிய சுதேச மருந்துப் பெட்டியை வழங்க அரசு முடிவெடுத்து.
அதன்படி, இதற்காக, ரூ.6 பில்லியன் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், முதல் கட்டடமாக ரூ. 2.5 பில்லியன் நிதி ஒதுக்கவே அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதில், ரூ.250 மில்லியனை திறைசேரி வழங்கியுள்ளது.
அந்தவகையில், இதுவரை 250,000 சுதேச மருந்துப் பெட்டிகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம். வரும் நாட்களில் கூடுதலாக மருந்துப் பெட்டிகளை வழங்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.