13 ஆவது திருத்தத்துக்கு எதிராக மாபெரும் பேரணி

13ஆவது திருத்த சட்டத்தை நிரகாரிக்குமாறு வலியுறுத்தியும்,மக்களுக்கு இது பற்றி தெளிவு படுத்தும் நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வீதிப் பிரச்சார நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்துள்ளது.

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்துவிடும் என வலியுறுத்தி, இன்று யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்த பிரச்சார பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி, நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகும் பேரணி, கிட்டு பூங்காவில் நிறைவடையவுள்ளது. அங்கு மேடை பிரச்சார நிகழ்வுகள் இடம்பெறும் என கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *