தேவையான எரிபொருள் கிடைத்துள்ளதால் இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை

தேவையான எரிபொருள் கிடைத்துள்ளதால் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு செய்ய வேண்டிய அவசியமில்லை என இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் குழு உறுப்பினர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நேற்று (24) பிற்பகல் 100 மெற்றிக் தொன் எரிபொருள் எண்ணெய் கிடைக்கப்பெற்றதன் மூலம் எவ்வித மின்வெட்டு இன்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ள முடியும்.

போதிய எரிபொருள் விநியோகம் இல்லாத காரணத்தினால் திட்டமிட்ட மின்வெட்டு மேற்கொள்ளப்படவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடியும்.

எவ்வாறாயினும் நேற்றிரவு சில பிரதேசங்களில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திட்டமிட்ட மின்வெட்டு காரணமாக சில பிரதேசங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசை விரட்டியடித்தால் தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நிம்மதி! – சஜித் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *