மூதூரில் புதிதாக கலைத்துறை ஆரம்பித்து வைப்பு

மூதூர் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/ மூ / பாரதிபுரம் மகா வித்தியாலயத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உயர்தரப் பிரிவு மற்றும் கலைத்துறையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (25) பாடசாலை அதிபர் த.வேலானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வினை பாரதிபுரம் மகா வித்தியாலய பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடபெற்றன.

குறித்த பாடசாலையானது 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக இப்பாடசாலையில் உயர்தரம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கு இணங்க இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு இப்பாடசாலை மகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு கலைத்துறை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் உயர்தரத்தில் கலைத்துறை ஆரபிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜே. ஜனார்த்தனன் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் முனவ்வரா நளீம், மூதூர் கோட்டக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *