ஒத்திவைக்கப்படுகின்றது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்? SamugamMedia

தேர்தலை தாமதப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரவில்லை என அக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திவாலான நாட்டைக் கொண்டு நடத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எவ்வாறு நிதியை கோர முடியும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் உள்ளூராட்சித் தேர்தல் தாமதமாகலாம் என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *