யாழில் உள்ள கட்டாக்காலி நாய்களை பிடியுங்கள் – யாழ். மாநகர சபை அமர்வில் கோரிக்கை SamugamMedia

யாழில் தெருநாய்கள் கட்டாக்காலி மாடுகளை மாநகரசபை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் து இளங்கோ யாழ். மாநகர சபை அமர்வில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ம் ஆண்டு பாதீடு சபையில் சமர்ப்பிப்பதற்கான விசேட அமர்வு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஈ.பி.டி.பி உறுப்பினர் இளங்கோ மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாய்களை கட்டுப்படுத்துங்கள் வீதிகளில் திரிகின்ற நாய்களை யாழ். மாநகர சபை கட்டுப்படுத்த வேண்டும். அத்தோடு மாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் இந்த விடயத்தில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *