
இலங்கையில் மொத்தம் 250,000 சுதேச மருந்துப் பொதிகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதற்காக 6 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், முதல் கட்டமாக 2.5 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் இன்று இவ்வாறு தெரிவித்தார்.
2.5 பில்லியன் பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய போதிலும், திறைசேரி 250 மில்லியன் ரூபாவை வழங்கியதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
சுதேச மருந்துப் பொதி ஒன்றினை தயாரிப்பதற்கு 1,000 ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 250,000 சுதேச மருந்துப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழ் சமூகத்தின் சட்டத்தரணிகளால் நிறுவப்பட்டுள்ள ‘பிரித்தானிய தமிழ் சட்டத்தரணிகள் சங்கம்’!