
மூதூர் மத்திய கல்லூரிக்கு, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட குழுவினர் இன்று செவ்வாய்கிழமை திடீர் விஜயத்தை மேற்கொண்டு பாடசாலை சமூகத்தினருக்கு கொரேனாத் தொற்றின் பரம்பல் குறித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வுகளை வழங்கி இருந்தனர்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலருக்கு கடந்த வாரம் கொரேனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவ் திடீர் விஜயம் மேற்கொள்ளப்பட்டு கொரேனா தொற்று தொடர்பான இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றுமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று மூதூரில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டு கொரேனாதொற்றின் தாக்கம், பாடசாலைகளில் கொரேனா தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கான முன் ஆயத்த ஏற்பாடுகள் குறித்து தெளிவூட்டல்களை எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் தெரிவித்தார்.
