சரியான நேரத்தில் வெளியே வருவேன்! மகிந்தவின் அதிரடி அறிவிப்பு SamugamMedia

சரியான நேரத்தில் வெளியே வருவேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இப்போது வெளியே வர விரும்பவில்லை. எப்படியும் சரியான நேரத்தில் வெளியே வருவேன். பிறகு என்ன நடக்குமென்று பார்ப்போம்” எனவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நான் இப்போது வெளியே வர வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நாம் ஒரு இளம் தலைமுறையை உருவாக்கியுள்ளோம். 

அவர்கள் இந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும். எப்படியிருந்தாலும், நான் சரியான நேரத்தில் வெளியே வருவேன். பின்னர் என்ன நடக்குமென்று பார்ப்போம் என்றும் கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *