கிழக்கு கடற்படை தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் தனநஎச்.ஈ.யு.டி.குமார நேற்று (14) மாலை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பட்டை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து சந்தித்தார்.
அங்கு கிழக்கு மாகாணத்தின் கடல்சார் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்தூரையாடல்கள் இடம் பெற்றதுடன், புதிய கடற்படை தளபதியின் வருகையைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.