இன்று, மதியம் முதல் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட சின்ன நடு தோட்ட பிரிவில் தொலை தொடர்பு கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 25 எக்டையர் தேயிலை தோட்டம் மூடப்பட்ட பகுதியில் உள்ள வன பகுதிக்கு தீ வைப்பு காரணமாக முழுமையாக எறிந்து அழிந்து உள்ளது.
இதனால், அப்பகுதியில் வாழ்ந்த வன ஜுவராசிகள் அழிந்து போய் விட்டது.விஷமிகள் தீ வைப்பு மத்திய மலைநாட்டில் அதிகரித்து உள்ளதால் நீர் ஊற்று வற்றிபோகும் அபாயம் தோன்றியுள்ளது.
இதனை கட்டுபடுத்த மலையக பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் முன் வரவேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கூறுகின்றனர்.