இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

யாழ்ப்பாணம், ஜனவரி 26:

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி மீன் பிடித்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18, 20 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 இந்திய மீனவர்களுக்கு தலா ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் , கைப்பற்றப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட 8 படகுகளில் ஒரு படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது. ஏனைய 7 படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் இது தொடர்பான விசாரணை வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக, இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்தது, கடற்றொழில் உபகரணங்களை தொடக்கறுத்து வைத்திருந்தல், சட்டவிரோத தொழில் முறையைப் பயன்படுத்தியது ஆகிய 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *