
யாழ்ப்பாணம், வடமராட்சி – புலோலி சூசையப்பர் தேவாலயத்தின் சிலைகள் அடையாளம் தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.