புலோலி சூசையப்பர் தேவாலய சிலைகள் உடைப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி – புலோலி சூசையப்பர் தேவாலயத்தின் சிலைகள் அடையாளம் தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *