இம்ரான் கானுடன் இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

கொழும்பு, ஜனவரி 26:

இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை செவ்வாய்கிழமை சந்தித்தனர்.

இவர்கள் பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை வர்த்தகக் குழுவுடன் அந்நாட்டுக்கு சென்றிருந்தனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பது:

இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்தனர். இதன்போது, 2021 பெப்ரவரியில் இலங்கைக்கு வந்ததை அன்புடன் நினைவு கூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் சகோதரத்துவ உறவு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை வர்த்தகக் குழுவுடன் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வருகை தந்ததைப் பாராட்டிய பிரதமர் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் உயர்மட்ட பரிமாற்றங்கள் அடிக்கடி நடக்க வேண்டும் என்று கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *